திரு சுந்தரராமன் அவர்களின் வலைப் பக்கங்களில் இருந்து...!
புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)
அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.
திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும் அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.
திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப் படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !
இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.
நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச் செய்ய வேண்டும்.! என்ன செய்யலாம்?
ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, உதவவோ அவரைத் தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140
பதிவுக்கு நன்றி: சுரேகா http://www.surekaa.com/2010/02/blog-post_18.html
Thursday, February 18, 2010 அன்று எழுதப்பட்ட இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் ஒன்று...
கிருஷ்ணமூர்த்தி February 18, 2010 9:09 AM
/இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.!/
அழிந்து வரும் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க,(புத்தகங்களும் இதில் அடக்கம்) தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்தமிழ் என்று கூகிள் க்ரூப்சில் தேடிப்பாருங்கள், இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் வலைக் குழுமம்.
அவர்களைத் தொடர்புகொண்டாலேயே, digigitisation of books எப்படிச் செய்வது என்பதைச் சொல்வார்கள். தவிர, தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் இருக்கும் திரு நா.கணேசன் ஞானாலயாவைப் பற்றி மின்தமிழிலும், வேறு சில வலைக் குழுமங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். உள்ளூரிலேயே இருக்கும் பழைய மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தால், அங்கே இருக்கும் புத்தகச் செல்வங்களைக் கணினி மயமாக்கிப் பாதுகாக்க முடியும்.
இதே உதவியை, சென்னையில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.முக்தா வி. ஸ்ரீநிவாசன் தி.நகரில் தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும் நூலகத்திற்கும், சென்னையில் உள்ள ஆர்வலர்கள் செய்து தரலாம்.
காப்புரிமைப் பிரச்சினையில் குறுக்கிடுவதாகவோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஏமாற்றும் முயற்சி அல்ல இது. பழைய, அரிய புத்தகச் செல்வங்களைப் பாதுகாக்கவும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கவும் செய்கிற கல்வித் தெய்வத்தின் பணி இது என்பதைப் புரிந்து கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.
அரசின் உதவியையோ, ஒத்துழைப்பையோ இதில் எதிர்பார்க்காமல், நமக்கு நாமே என்பதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய அவசரமான கடமையும் இது!
அழிந்து வரும் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க,(புத்தகங்களும் இதில் அடக்கம்) தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்தமிழ் என்று கூகிள் க்ரூப்சில் தேடிப்பாருங்கள், இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் வலைக் குழுமம்.
அவர்களைத் தொடர்புகொண்டாலேயே, digigitisation of books எப்படிச் செய்வது என்பதைச் சொல்வார்கள். தவிர, தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் இருக்கும் திரு நா.கணேசன் ஞானாலயாவைப் பற்றி மின்தமிழிலும், வேறு சில வலைக் குழுமங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். உள்ளூரிலேயே இருக்கும் பழைய மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தால், அங்கே இருக்கும் புத்தகச் செல்வங்களைக் கணினி மயமாக்கிப் பாதுகாக்க முடியும்.
இதே உதவியை, சென்னையில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.முக்தா வி. ஸ்ரீநிவாசன் தி.நகரில் தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும் நூலகத்திற்கும், சென்னையில் உள்ள ஆர்வலர்கள் செய்து தரலாம்.
காப்புரிமைப் பிரச்சினையில் குறுக்கிடுவதாகவோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஏமாற்றும் முயற்சி அல்ல இது. பழைய, அரிய புத்தகச் செல்வங்களைப் பாதுகாக்கவும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கவும் செய்கிற கல்வித் தெய்வத்தின் பணி இது என்பதைப் புரிந்து கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.
அரசின் உதவியையோ, ஒத்துழைப்பையோ இதில் எதிர்பார்க்காமல், நமக்கு நாமே என்பதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய அவசரமான கடமையும் இது!