Wednesday 8 August 2012

இந்த வாரம் கலாரசிகன்...!



ழைய புத்தகக் கடைகளும், பழைய நூலகங்களும் என்னை ஈர்க்கும் காந்தங்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் திருவனந்தபுரம் மத்திய நூலகத்துக்குச் சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பழைய தமிழ்ப் புத்தகங்களைத் தூசு தட்டிப் புரட்டிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

திருவிதாங்கூரை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவால் 1829-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் திருவனந்தபுரம் மத்திய நூலகம்தான் இந்தியாவில் அமைந்த முதல் பொது நூலகம்.கர்நாடக சங்கீத விற்பன்னராகவும், பல சாகித்யங்களை இயற்றிய புலவராகவும் இருந்த சுவாதித் திருநாள் மகாராஜா இந்த நூலகத்தை உருவாக்கும் பொறுப்பைகர்னல் எட்வர்ட் காடகன் என்கிற பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல, மகாராஜா இந்த நூலகத்துக்கு வைத்த பெயர் திருவனந்தபுரம் மக்கள் நூலகம் என்பது.

ந்த நூலகத்தில் ஜெர்மானியர் ஒருவரைத் தற்செயலாக சந்தித்தேன். இளைஞனான எனக்கு ஓர் அந்நிய நாட்டவர் இந்தியநூலகத்தில் ஆர்வமுடன் பல விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுத்து அவருக்கு நெருக்கமானேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால் எனக்கு அவரது பெயர் நினைவில்இல்லை. அந்தத் தொடர்பு அத்துடன் முறிந்து விட்டதும் ஒரு காரணம்.

ந்த ஜெர்மானியர் சொன்ன ஒரு செய்தி எனது மனதில் பதிந்தது. இன்றுவரை உறுத்திக்கொண்டும் இருக்கிறது. அது- "இந்தியர்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகளாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தங்களது கண்டு பிடிப்புகளையும், சாதனைகளையும், பேரறிவையும் ஆவணப் படுத்தாமல் விட்டு விட்டார்கள். குறைந்தபட்சம், ஓலைச் சுவடிகளையாவது பராமரித்துப் பாதுகாத்தார்களா என்றால் இல்லை. அதனால்தான், இந்தியர்கள் பின்தங்கிவிட்டனர்!''

வ்வளவு பெரிய உண்மை! இதை நான் நூலகங்களுக்குப் போகும் போதெல்லாம் நினைத்து வேதனைப்படுவேன். நல்லவேளை, தமிழ்த் தாத்தா உ.வே.சா. முனைப்புடன் செயல்பட்டிருக்கா விட்டால் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் செவ்விலக்கியங்கள்கூடக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதைஎப்படி மறக்க முடியும்? 

இனியாவது அந்தத் தவறைச் செய்யாமல், நம்மிடம்இருக்கும் அரிய நூல்களையும், தகவல்களையும், ஓலைச்சுவடிகளையும் ஆவணப் படுத்துவோமா என்றால், உற்சாகமாக "ஆமாம்' என்று சொல்ல இயலவில்லை.

ந்தச் சூழ்நிலையில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சுவடி மற்றும் நூல் பாதுகாப்பாளராகவும், நூலகராகவும் பணியாற்றும் முனைவர் ப.பெருமாள், சுவடிப் பாதுகாப்பு வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

னக்குத் தெரிந்த, தான் அனுபவத்தால் கற்றவித்தைகள், வருங்கால சந்ததியினருக்கும், தனக்குப் பின்னால் உருவாகப் போகும் நூலகர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற அவரது உயரிய நோக்கத்திற்காகவேமுனைவர் பெருமாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ரிஸ்டாடில் கி.மு. 335-இல் எழுதிய "ஹிஸ்டரியோ அனிமலியம்' என்ற நூலில் புத்தகங்களின்மீது வாலில்லாத தேள் போன்ற பூச்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார். புத்தகம் என்று அவர் குறிப்பிடுவது ஓலைச்சுவடிகளாகத்தான் இருக்க வேண்டும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் புத்தகப் புழு, வெள்ளி மீன், கறையான், புத்தகப் பேன் போன்ற பூச்சிகளினால் காகிதச் சுவடிகள் அழிவுக்கு ள்ளாகின்றன. ஓலைச் சுவடிகள் புத்தகப் புழு, கரப்பான் பூச்சி மற்றும் கறையான்களால் அழிவுக்குள்ளாகின்றன'' என்று பதிவு செய்யும் முனைவர் பெருமாள், ஓலைச்சுவடிகள் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து அளிக்கிறார்.

சுவடிகள் நம் சமூக வரலாற்றைப் பாதுகாத்த பெட்டகம். சுவடிகளைப் பாதுகாப்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பதாகும்' என்கிற கடமை உணர்வுடன் செயல்பட்டு சுவடிகள் பற்றிய அத்தனை விவரங்களையும், சுவடிப் பாதுகாப்பு பற்றிய எல்லா அம்சங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் பெருமாள்.

வ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு தமிழ் அமைப்பும் முனைவர் ப.பெருமாளை அழைத்து கெüரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டு கோள். இவரைப் போலத் தனக்குத் தெரிந்தது வருங்கால சந்ததியருக்கும் தெரிய வேண்டும் என்று நமது முன்னோர்கள்நினைக்காததாலும், ஆவணப் படுத்தப்பட்ட அரிய பல விஷயங்களைப் பாதுகாக்கத் தவறியதாலும்தானே நாம் நமது சரித்திரத்தையும் சாதனைகளையும் நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.

முனைவர் ப.பெருமாளுக்கும், அவரது புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட காரைக்குடி கோவிலூர் மடாலயத்துக்கும்தமிழ்கூறு நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த ஞாயிறு அன்று (05-08-2012) இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் தினமணி ஆசிரியர் எழுதிய கட்டுரையின் முழுவடிவமும் இங்கே!

இந்தப் பத்தியில் ஓலைச்சுவடிகளைக் குறித்துச் சொல்லியிருப்பது, ஞானாலயா ஆய்வு நூலகத்தில் இருக்கும் அரிய புத்தக சேகரத்துக்கும் அப்படியே பொருந்துகிறதே!வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆவணப் படுத்துகிற வேலை நம் முன்னால் காத்திருக்கிறது.


ஞானாலயா உங்கள் உதவிக்கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது! வாருங்கள்! கை கொடுங்கள்!
..

Thursday 2 August 2012

கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?


சிரிக்கும் துறவிகள்என்ற தலைப்பில், ஞானாலயா திரு பா.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் காக்கைச்சிறகினிலே டிசம்பர் 2011 இதழில் ஜென் புத்தரியத்தைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இருந்த ஒரு கதையை, முந்தைய பதிவொன்றில் பார்த்திருந்தோம், இல்லையா!



ஜென் என்பது என்ன? மதமாய் நிறுவப்படாத ஒரு அற்புத இயல்புத் தன்மை! சாதாரண மனதின் விழிப்புணர்ச்சிச் சிகரம்!முழுமையான விடுதலையை நோக்கிய எதார்த்தம்! தீவீரமான இயற்கைத்தன்மை கொண்ட வாழ்க்கையின் களிப்பு!

ப்படி ஒரு சுருக்கமான விளக்கத்தோடு ஜென் பற்றிய அறிமுகம் தொடங்குகிறது. அடுத்து, இத்தகைய குணாதிசயங்கள் மனிதனின் வாழ்க்கையில் சாத்தியம் தானா  என்று இயல்பாகவே எழும் மனித மனத்தின் சந்தேகப்படும் இயல்பைத் தொட்டு,விடை சொல்கிற மாதிரி ஜென் (பவுத்தத்தின்) தோற்றத்தின் பின்னணியைத் தொட்டு கட்டுரை விரிகிறது.

புத்தருக்கு முன்னாலேயே சீனாவில் லாவோட்சேயும், கன்பூசியசும், தத்துவார்த்தத் தேடலை தொடங்கி வைத்திருந்தாலும், ஜென் வாழ்க்கையின் எதார்த்தங்களை விட்டு விலகியோ, அல்லது எதார்த்தத்தில் இருந்து தப்பிச் செல்வதையோ ஏற்கவில்லை. ஜென் ஜப்பானிய தேசத்தில் பிறந்து, செழுமையடைந்ததைக் கட்டுரை, தெளிந்த நீரோட்டம் போல எடுத்துச் சொல்கிறது.அங்கங்கே ஜென்னை புரிய வைக்கும் முகமாக சிறு சிறு குட்டிக் கதைகள்!

ருமுறை இரு ஜென் துறவிகள் கொடிக்கம்பத்தில் ஒரு கோடி பறந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.தங்களுக்குள் விவாதம் செய்து  கொண்டிருந்தனர்.

"
காற்று தான் அசைகிறது" என்றார் ஒருவர்.

"
இல்லை, இல்லை!கொடிதான் அசைகிறது" என்றார் மற்றொருவர்.

இந்த விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஜென் குரு இடை மறித்துச் சொன்னார்,"கொடியும் அசையவில்லை! காற்றும் அசையவில்லை!உங்கள் மனந்தான்அசைகிறது" என்று. இதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இரு துறவிகளின் மனதில் பதியும்படி மேலும் தொடர்ந்தார் குரு. "வாயைத் திறந்ததும் அனைத்தும் தவறாகின்றன."

விவாதங்களும் அறிவுரைகளும் எப்போதும் முழுமையை எட்டுவதில்லை!



காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளி வருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225
தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005


மின்னஞ்சல் : saalaramvaigarai@gmail.com

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...