Saturday 28 July 2012

தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடிக்கு நூற்றாண்டு விழா!



சென்ற மாதம் பதினேழாம் தேதி  (17-06-2012) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடியான சக்தி திரு வை.கோவிந்தன் அவர்களின் நூற்றாண்டு விழா  கொண்டாடப்பட்டது. ,திரு வை.கோவிந்தன் எழுதிய நூல்கள், பதிப்பித்த புத்தகண்கள், நடத்திய சக்தி மாத இதழ், எழுதிய கடிதங்கள் என்று ஒரு கண்காட்சியையே சேர்த்து நடத்தியது இந்த நூற்றாண்டு விழாவின் முக்கியமான அம்சம்.

க்தி திரு வை கோவிந்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தவிர வேறு யார், அவரைப்[ பற்றி இவ்வளவு விரிவான தகவல்களைத் தர முடியும்? வேறு யார் இத்தனை வெளியீடுகளையும் ஒன்று விடாமல் சேகரித்துப் பராமரித்து ஒரு கண்காட்சியாகவும் நடத்தி, சக்தி வை.கோவிந்தனுடன் பதிப்புத்துறையில் கூடச் சேர்ந்து பயணிக்கிற உணர்வை ஏற்படுத்தி தந்து விட முடியும்?
..
..
..
சைக்கவி திரு ரமணன் பேசிக் கொண்டிருக்கிறார். அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கல்கண்டு ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன், திரு.வெ.. இறையன்பு இ ஆ ப, வலக்கோடியில் ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தி   


..

நூற்றாண்டு விழாவில் எடுத்த வீடியோவில் ஒலியின் தரம் சரியாக இல்லாததால், புதுக்கோட்டையில் ஞானாலயா திரு.பா கிருஷ்ணமூர்த்தியின் உரையை மறுபடியும் ஒளிப்பதிவு செய்து  அனுப்பிய நண்பர் சென்னை க்ரியேடிவ் ஸ்டூடியோ திரு. எம்.விஜயனுக்கு நன்றியுடன்!

ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்று ஒரு குழு இப்போதுதான் உருவாகி வளர்ந்து வருகிறது.இந்த அறிவுத் திருக்கோவிலைப்  பாதுகாப்பதில் உங்கள்ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்கவேண்டும், நீங்களும் இந்தக் குழுவுடன் இணைந்து--அது எவளவு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்! ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்பது தான் முக்கியம்!

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஒவ்வொருவருடைய உதவிக்கரங்களையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது!



வாருங்கள்!சேர்ந்து செயல்படலாம்!
..
..
தொடர்புடைய பதிவு  -இதை வாசித்தீர்களா? 

..

Thursday 26 July 2012

ஞானாலயா! வாருங்கள் சேர்ந்து செயல்படலாம்!


ந்த வலைப்பக்கங்களை  நண்பர் நிகழ்காலத்தில் சிவா துவங்கி வைத்த நேரம், மிக மிக நல்ல நேரம் என்றே சொல்ல வேண்டும்!
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கிறது என்ற செய்தி, தமிழ் இணையத்தில் நிறைய நண்பர்களை சென்றடைந்திருக்கிறது..

செய்திகள் பரவிய அதே வேகத்தில் உதவிக்கரங்கள் நீளவில்லை என்பது உண்மையே!
னாலும்,இந்த செய்தி நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் சிறுகச் சிறுக உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை, நன்றியோடு இந்தத் தருணத்தில் சொல்லியே ஆகவேண்டும்.

ப்படி முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்ததில் கொஞ்சம் கூடப்பொய்யே இல்லை! சிவாவைத் தொடர்ந்து கழுகு குழுமத்திலும் தன்னுடைய வலைப்பதிவிலும் நண்பர் தேவா ஞானாலயாவுக்கு உதவிக் கரங்களைத் தேடுவதில் சேர்ந்து கொண்டார். இப்போது திருப்பூரில் இருந்து நண்பர் ஜோதிஜி இந்தக் குழுவில் சேர்ந்து கொண்டிருக்கிறார்
 
http://www.4tamilmedia.com/ தளத்தில் ஒரு பரந்த அளவிலான வாசகர்களிடம் ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு சென்றதிலும், தன்னுடைய நண்பர்கள் வழியாக முடிந்ததைச் செய்யும் பணியிலும் ஜோதிஜி  சேர்ந்து கொண்டிருக்கிறார். அதே மாதிரி இன்னொரு அமெரிக்க வாழ் நண்பர், தற்சமயம் இந்தியாவுக்கு வந்திருப்பவர், தொடர்பு கொண்டு தான் செய்யக் கூடியதென்ன என்பதைக் கேட்டறிந்தார்.

கூகிள் ப்ளஸ்சில் மட்டும் ரீஷேர் செய்யப்பட்டபகிர்ந்து கொண்ட ப்ளஸ்சர்களைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை அப்படியே எடுத்துக் கொண்டு இந்த செய்தி எத்தனை முறை வலம் வந்ததென்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற செய்தி சுமார் மூன்று லட்சம் பேர்களை, அல்லது மூன்று லட்சம் தடவை தமிழ் இணையத்தில், கூகிள் ப்ளஸ்ஸில் புழங்கிக் கொண்டு  இருப்பவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

னால், இந்த செய்தியை எத்தனை பேர் உள் வாங்கிக் கொண்டார்கள், நாமும் இதில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று எத்தனை பேர் முன் வந்தார்கள் என்றுபார்த்தால், இருகை விரல் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும்!

ப்படியானால், இதுவரை செய்ததெல்லாம் வீண் தானா? இல்லவே இல்லை! 


Think differently  என்ற வலைப்பதிவில் சில மாதங்களுக்கு முன்னால், திரு மக்கின்னான், டெரெக் சிவெர்ஸ் என்பவர் யூட்யூபில் தலைமைப் பண்பு  குறித்து வலையேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மூன்று நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். இதனுடைய டெக்ஸ்ட் வடிவமிங்கே

மேல் சட்டை அணியாத ஒருவர், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நடனமாட ஆரம்பிக்கிறார். சிறிது நேரமானதும் இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார்.  
ந்த முதல் பின்பற்றும் நபர்  கிடைக்கும் அந்தத் தருணம் தான் மிக முக்கியம்

ரண்டுபேர் சேர்ந்து நடனமாட ஆரம்பித்ததும், மூன்றாவதாக ஒருவர் சேர்ந்து கொள்ள, நடனமாடும் விருப்பம் ஒரு கூட்டத்தின் விருப்பமாக மாற ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்!

மாற்றத்திற்குத் தயாராவதும் இப்படித் தான்! ஒரு முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான். அவனைப் பின்பற்றும் அந்த முதலாவது, இரண்டாவது ஆர்வலர்கள் தான் முக்கியம். அப்புறம் அது எல்லோருக்கும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது!

ங்கே இந்த இடத்தில் அந்த முன்னோடியாக ஞானாலயா தம்பதியினரை வைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆயுட்கால உழைப்பை, சாதனையை உண்மையாக  பின்பற்றுகிற ஆர்வலர்கள் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்!

ப்படி உண்மையான ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில், ஏன் நூற்றுக் கணக்கில் கூட  வேண்டியதே இல்லை, ஒரு நாலைந்து பேர் சேர்ந்தாலே கூடப்போதுமானது! ஆயிரக்கணக்கானவர்களை ஈடு படுத்துகிற மாற்றத்தின் கருவிகளாக, விதை நெல்லாக  அவர்கள் தான் இருப்பார்கள்!

லமரத்தின் விழுதுகளாக, விதைநெல்லாக, மாற்றத்தின் கருவிகளாக இருக்கச் சம்மதமா? வாருங்கள்! சேர்ந்து செயல்படலாம்!

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய காத்துக் கொண்டிருக்கின்றன!

..

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...