Showing posts with label திரு. கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label திரு. கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Tuesday, 8 January 2013

திட்டமிடுதலை புரிந்து கொள்ளுங்க


திட்டமிடுதல் என்பது தான் இங்கே முக்கியமாக கருதப்படுகின்றது. நாட்டில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் ஓராயிரம் பேர்களின் திட்டமிடுதலுடன் கூடிய உழைப்பு மூலமே சாத்தியமாகி நமக்கு கிடைத்துள்ளது.  ஆனால் புதுக்கோட்டையிலிருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர் மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தி என்ற இருவரின் உள் மன ஆசைகளை, நோக்கங்களை மட்டும் கொண்டே இன்று சாத்தியமாகி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன் தந்து கொண்டிருக்கின்றது.

தினந்தோறும் ஏராளமான உள்நாடு, வெளிநாடு, வெளிமாநில மக்கள் தாங்கள் தேடிக் கொண்டிருந்த தமிழ் ஆங்கில புத்தகங்களை ஞானாலயாவில் கண்ட போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை அங்கேயிருக்கும் வருகை பதிவேட்டில் தங்கள் கையெழுத்து மூலம் எழுதி வைத்துள்ளனர்.  நீங்களும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைக்கலாமே.

திரு கிருஷ்ணமூர்த்தியின் ஞானாலயா நூலகத்தைப் பற்றி தமிழ் ஆங்கில பத்திரிக்கையில் பல பேட்டிகள் வந்துள்ளன.  அவை ஒவ்வொன்றையும்  அடுத்தடுத்த  பதிவுகள் மூலம் இணைய உலகத்திற்கு  அறிமுகப் படுத்துவதில் பெருமையடைகின்றோம்.

இந்த நூலகத்தின் திட்ட வரைவு, செலவீனங்கள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு.

ஜனவரி 2013 27 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா திரு. பா கிருஷ்ணமூரத்தி உரையாற்றுகின்றார்.  முழுமையான விபரங்கள் படிக்க சொடுக்க இங்கே






ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...