Thursday 28 February 2013

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்புரை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு திடீர் பயணமாக 27.02.2013 அன்று நேரில் சென்றிருந்தேன். இந்த நூலகம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். பயனாக வேண்டும் என்ற திரு.கிருஷ்ணமூர்த்தி ஞானாலயா அவர்களின் ஆர்வத்தை ஆசையை நோக்கத்தை பலமுறை கேட்டு இருக்கிறேன்.

நூலகத்தில் சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாலும் ஒரு எழுதப்படாத சரித்திரம் இருக்கிறது. அந்த புத்தகம் எந்த சூழலில் எழுதப்பட்டது. எந்த சூழலில் பதிப்பிக்கப்பட்டது. அந்த ஆசிரியர், பதிப்பகத்தார் குறித்த எங்குமே கிடைக்காத பல அரிய செய்திகள் திரு.ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றன.

ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு ஆவணம். அவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியம் அந்த உரைகளைக் கேட்டால் விளங்கும்.  வீடியோ உரைகளாக சேமிக்க திட்டமிட்டாலும் அதற்கான செலவுகள், மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், தேவைப்படும் தன்னார்வத் தொண்டர்கள் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு  ஆடியோ வடிவிலான உரைகளை சேமிக்க எண்ணம் கொண்டேன்.

அதற்கான சில உபகரணங்களை வாங்கிக்கொண்டு நேரில் சென்று மாதிரி ஒலிப்பதிவு ஒன்றை முயற்சித்துப் பார்த்தேன். நான் நினைத்தை விட ஒலி துல்லியம் கிடைத்தது. அதை அனைவருக்கும் சென்று சேர்க்க எண்ணி இங்கு பதிவிட்டு இருக்கிறேன், இதில் விவேகாநந்தர், மேக்ஸ்முல்லர் பற்றி கொஞ்சமாக பேசி இருக்கிறார்.

இந்த முயற்சி தொடரும்.,, இதற்கான நண்பர்கள் குழு சேர்க்கவும் எண்ணமிட்டு இருக்கிறேன். வரும்காலத்தில் ஞானாலயாவிற்கு எந்தவிதத்தில் முடியுமோ அவ்விதமாக..உதவும் வகையில் ஒத்த எண்ணமுடையோர்களை இணைத்து குழுவாக்க ஆசைப்படுகிறேன்.




உரையை கேட்டீர்களா.. இனி இது போன்ற உரைகள், புதிய இடுகைகள் இந்த வலைதளத்தில் வலையேற்றம் செய்யும்போது உங்களுக்கு உடனடியாக செய்தி தர உங்கள் மெயில்முகவரியை என் arivhedeivam@gmail.com க்கு அனுப்புங்கள்.

Monday 18 February 2013

The Pudukottai book collector

கோவையில் கடந்த 10ம் தேதி நடந்த நிகழ்வில் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா பேசிய உரை ஏற்கனவே முந்தய இடுகைகளில் பகிர்ந்திருக்கிறோம். அந்த நிகழ்வைப் பற்றி தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி இதோ....

B. Krishnamurthy has set up one of the country’s largest private libraries housing rare first editions of Tamil books.

 

 Arignar Anna had a knack for narrating a story. He would take his listeners to far off places before leading them to the crux of the matter. “He would give them extensive background details… and they would wonder where he was headed,” recalls ‘Gnanalaya’ B. Krishnamurthy.

 Krishnamurthy owns the precious first edition of Anna’s book Makkal Karamum Mannin Siramum . It is among the 85,000 titles in his research library ‘Gnanalaya’ in Pudukottai. Krishnamurthy was in the city to participate in a monthly literary meet organised by the District Central Library’s Reader’s Circle and Vijaya Pathipagam.

 With over 15,000 titles in English and 70,000 in Tamil, Gnanalaya has a large collection of rare first editions of Tamil books. Krishnamurthy’s quest for books started when he was a teenager. His father once gave him a copy of Thanippadal Thirattu . It was signed by Ku. Alagirisamy, the editor of the magazine Sakthi . Alagirisamy, a man of unshakeable determination, had mentioned that the book was extremely rare and that he hadn’t seen it anywhere else. But there it was, in the hands of a teenager in Trichy. Krishnamurthy decided then that he would seek every rare book there was, no matter what.

 Today, his research library in Pudukottai is the result of decades of hard work. Krishnamurthy has travelled to every nook and cranny of Tamil Nadu in search of books. Behind every painstakingly collected title is a story.

 He once went to a village near Nagercoil looking for a book. He had a long way to go and decided to hire a bicycle. The man who ran the rental didn’t trust him, so Krishnamurthy gave him his expensive watch in return. “I would’ve even given him the shirt off my back if I had to,” he smiles.

Gnanalaya draws visitors from all over the world — there are some that Krishnamurthy will never forget. “I once heard one of them comment, ‘this man must be mad’,” he laughs.

நன்றி: தி ஹிந்து ஆங்கில நாளிதழ்

ஞானாலயாவைப் பற்றி தினகரன் 17/02/2013

இது எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல..சமூகத்துக்கானது..எல்லோரும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எங்கள் பொறுப்பில் இலவசமாக தங்குமிட வசதிகளை செய்து தருகிறோம். நூலகத்தை பயன்படுத்துவதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. மனமுவந்து உதவுபவர்களிடம் பெற்றுக்கொள்கிறேன்- இது ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகள்.. முழுபேட்டி தினகரன் வசந்தம் இணைப்பில் கீழே..
அடுத்த பக்கம்

ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. நிகழ்காலத்தில் சிவா

Sunday 17 February 2013

திருப்பூரில் ஞானாலயா மழை - Dollar Nagaram - Gnanalaya B. Krishnamiirthy Part 1

திருப்பூரில் கடந்த 27.1.2013 அன்று நடந்த டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில், புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஏறக்குறைய 50 நிமிடங்கள் புத்தகங்கள்,உலகளாவிய நூலகங்கள் குறித்து உரையாற்றிய காணொளியின் முதல் பகுதி இது.

பொதுவாக மேடைப் பேச்சு என்பது தற்காலத்தில் அலங்கார வார்த்தைகளால் கோர்த்து அது கேட்பவருக்கு பொழுது போக்க உதவும் கலையாக உள்ளது.  ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காணொளி காட்சிகளை கேட்டுப் பாருங்கள்.  

நீங்கள் இது வரையிலும் அறியாத தகவல்களாக , இன்று வரையிலும் புத்தகங்களில் வெளிவராத தகவல்களின் தொகுப்பாக, அறிவுக்களஞ்சியமாக ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும், விசயங்களைப் பற்றியும் தனது கம்பீரமான குரலால் எடுத்து வைக்கின்றார்.

இதுவரையிலும் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகம் முழுக்க பல்வேறு அமைப்புகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், பல்வேறு இலக்கிய அமைப்ப்புகளின் மூலம் 2000 கூட்டங்களுக்கும் மேல் பங்கெடுத்து தான் கற்ற புத்தக அறிவை மற்றவர்களுக்கு பரப்புவதை ஒரு கடமையாக வைத்துள்ளார்.  

தற்போது தான் அதன் காணொளி காட்சிகளை ஆவணப்படுத்துவதில் இந்த வலை தளம் சிறப்பாக செயலில் காட்டிக் கொண்டிருக்கின்றது.  

உங்கள் நண்பர்களுக்கும் ஞானாலயா குறித்து தெரிவிக்க இந்த வலைதளத்தை முழுமையாக படித்துப் பாருங்கள். நாம் சமூகத்திற்காக தனியாக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினாலே இதுவும் ஒருவிதமான சமூக அக்கறை தான்.

பகிர்ந்து கொள்வதில் அறிவு பகிர்தல் தான் தலைமுறைகள் தாண்டியும் நிற்கக்கூடியது.

வருகை புரிந்த உங்களுக்கு ஞானாலயா ஆய்வு நூலகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றி.  இரண்டாவது தொகுப்பு அடுத்த பதிவில் வெளியிடப்படும்.



Monday 11 February 2013

கோவையில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மையநூலக வாசகர் வட்டமும், விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ஏழாவது சிந்தனை முற்றத்தில் பதிப்புத்துறை - அன்றும் இன்றும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 10.02.2013 காலை10.45 மணி அளவில்

அதில் திரு.செந்தலை ந.கவுதமன் கலந்து கொண்டு பேசினார். அந்த சுற்றுவட்டாரத்தில் அமைந்த சாலைகளின் பெயர்கள், அவை அமைந்த வருடம், காரணம், பெரியவர்களின் பெயர்களோடு அதன் பின்னணியில் உள்ளவர்களின் அரும்பணிகளை பட்டியலிட்டபோது மலைப்பாக இருந்தது.சிலிர்க்க வைத்தது என்றால் மிகையில்லை.

அடுத்து புதுக்கோட்டை ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் உரை முழுவதும் இரண்டு வீடியோக்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

உரை




தொடர்ச்சி



இதற்குப்பின் நாஞ்சில் நாடன் பேச் விழா நிறைவடைந்தபோது மணி மதியம் இரண்டு மணி.

புதுக்கோட்டை ஞானாலயா அய்யாவின் உரையை கேட்டால் தமிழ் புத்தகங்களின் இன்றைய நிலை தெளிவாகத் தெரியும். தமிழில் ஏறக்குறைய இவரிடம் இல்லாத முதல் பதிப்புப் புத்தகங்களே இல்லை எனலாம். இத்தகைய புத்தகங்கள் கொண்ட ஞானாலயாவை காப்பதற்கு கைகோர்ப்போம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...