Monday 11 February 2013

கோவையில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மையநூலக வாசகர் வட்டமும், விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ஏழாவது சிந்தனை முற்றத்தில் பதிப்புத்துறை - அன்றும் இன்றும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 10.02.2013 காலை10.45 மணி அளவில்

அதில் திரு.செந்தலை ந.கவுதமன் கலந்து கொண்டு பேசினார். அந்த சுற்றுவட்டாரத்தில் அமைந்த சாலைகளின் பெயர்கள், அவை அமைந்த வருடம், காரணம், பெரியவர்களின் பெயர்களோடு அதன் பின்னணியில் உள்ளவர்களின் அரும்பணிகளை பட்டியலிட்டபோது மலைப்பாக இருந்தது.சிலிர்க்க வைத்தது என்றால் மிகையில்லை.

அடுத்து புதுக்கோட்டை ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் உரை முழுவதும் இரண்டு வீடியோக்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

உரை




தொடர்ச்சி



இதற்குப்பின் நாஞ்சில் நாடன் பேச் விழா நிறைவடைந்தபோது மணி மதியம் இரண்டு மணி.

புதுக்கோட்டை ஞானாலயா அய்யாவின் உரையை கேட்டால் தமிழ் புத்தகங்களின் இன்றைய நிலை தெளிவாகத் தெரியும். தமிழில் ஏறக்குறைய இவரிடம் இல்லாத முதல் பதிப்புப் புத்தகங்களே இல்லை எனலாம். இத்தகைய புத்தகங்கள் கொண்ட ஞானாலயாவை காப்பதற்கு கைகோர்ப்போம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

1 comment:

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...