Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Sunday, 16 August 2015

புதுக்கோட்டை நகர் சார்ந்த நண்பர்களுக்கு ஞானாலயா

இன்று மாலை புதுக்கோட்டையில் நிகழும் ஞானாலயா விழா நிகழ்வுகள் நடக்கின்றன..ஞாபகப்படுத்தலுக்காக



விழாவில் வெளியாக இருக்கும் மூன்று நூல்கள்



வாருங்கள். மறக்கவியலா அனுபவத்தை பெறுங்கள்

Thursday, 25 December 2014

ஞானாலயா நூலகத்திற்கான நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு - தகவல்

நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஞானாலயாவைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள்.  ..தமிழில் கடந்த நூறாண்டுகளுக்குள் வெளியான நூல்களின் முதற்பதிப்பு நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு உள்ளன.

பதிப்புகள் பல காணும் நூல்கள், பெரும்பாலும் மூலவடிவில் இருப்பதில்லை என்பதை ஞானாலாயா நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் சொல்லும்போது , இந்நூல்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு விளங்கும்..

இந்த நூலகத்திற்கென தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டியதோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாத்தும் அங்கே நேரில் வருபவர்கள் விரும்பும் புத்தகத்தில்  பகுதிகளை நகல் எடுத்தும் தந்தும் இன்றளவும் உற்சாகம் குறையாது இருக்கின்றனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.

இவர்களது முயற்சிக்கு உறுதுணையாய், நூலகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்நூலகத்தின் அரிய நூல்களை மின்நூல்கள் ஆக்கி பாதுகாக்கவும் நன்கொடைகளை அளிக்க உதவும் நல் உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நன்கொடைகளுக்கான வரிவிலக்கு 80G அனுமதி பெறப்பட்டிருக்கிறது.








அதன் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன...ஐயா வேண்டுகோளும் இணைக்கப்பட்டுள்ளது....நண்பர்களிடம் கொண்டுசேர்ப்போம்...நூலகத்தில் வளர்ச்சியில், பாதுகாப்பதில் நமது பங்கினை உறுதி செய்வோம்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள.. 

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140




நன்றியுடன்

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, 8 January 2013

திட்டமிடுதலை புரிந்து கொள்ளுங்க


திட்டமிடுதல் என்பது தான் இங்கே முக்கியமாக கருதப்படுகின்றது. நாட்டில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் ஓராயிரம் பேர்களின் திட்டமிடுதலுடன் கூடிய உழைப்பு மூலமே சாத்தியமாகி நமக்கு கிடைத்துள்ளது.  ஆனால் புதுக்கோட்டையிலிருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர் மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தி என்ற இருவரின் உள் மன ஆசைகளை, நோக்கங்களை மட்டும் கொண்டே இன்று சாத்தியமாகி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன் தந்து கொண்டிருக்கின்றது.

தினந்தோறும் ஏராளமான உள்நாடு, வெளிநாடு, வெளிமாநில மக்கள் தாங்கள் தேடிக் கொண்டிருந்த தமிழ் ஆங்கில புத்தகங்களை ஞானாலயாவில் கண்ட போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை அங்கேயிருக்கும் வருகை பதிவேட்டில் தங்கள் கையெழுத்து மூலம் எழுதி வைத்துள்ளனர்.  நீங்களும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைக்கலாமே.

திரு கிருஷ்ணமூர்த்தியின் ஞானாலயா நூலகத்தைப் பற்றி தமிழ் ஆங்கில பத்திரிக்கையில் பல பேட்டிகள் வந்துள்ளன.  அவை ஒவ்வொன்றையும்  அடுத்தடுத்த  பதிவுகள் மூலம் இணைய உலகத்திற்கு  அறிமுகப் படுத்துவதில் பெருமையடைகின்றோம்.

இந்த நூலகத்தின் திட்ட வரைவு, செலவீனங்கள் குறித்த விபரங்கள் உங்கள் பார்வைக்கு.

ஜனவரி 2013 27 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா திரு. பா கிருஷ்ணமூரத்தி உரையாற்றுகின்றார்.  முழுமையான விபரங்கள் படிக்க சொடுக்க இங்கே






ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...