Sunday, 16 August 2015

புதுக்கோட்டை நகர் சார்ந்த நண்பர்களுக்கு ஞானாலயா

இன்று மாலை புதுக்கோட்டையில் நிகழும் ஞானாலயா விழா நிகழ்வுகள் நடக்கின்றன..ஞாபகப்படுத்தலுக்காக



விழாவில் வெளியாக இருக்கும் மூன்று நூல்கள்



வாருங்கள். மறக்கவியலா அனுபவத்தை பெறுங்கள்

Monday, 3 August 2015

வருகின்ற ஆகஸ்ட் 16, ஞானாலயா பவளவிழா அழைப்பிதழ்



வருகின்ற ஆகஸ்டு16 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம், அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..

அவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.

வாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

தங்களின் பார்வைக்கு கீழே அழைப்பிதழ்




நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Tuesday, 30 June 2015

ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில் ஞானலயா கிருஷ்ணமூர்த்தி உரை 26.04.2015

கடந்த ஏப்ரல் 26 ம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்த ஜெயகாந்தன் புகழ் அஞ்சலி கூட்டத்தில்
திரு.S. ஆரோக்கியசாமி
மருத்துவர் திரு. ஜெயராமன்
முனைவர் நா.அருள்முருகன்
எழுத்தாளர் சந்திரகாந்தன்
ஞானாலயா ஆய்வு நூலகம் திரு.பா. கிருஷ்ணமூர்த்தி (சிறப்புரை)
M.T.கந்தசாமி ஆகிய அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினர்

அந்த தொகுப்பின் ஒலி,ஒளி வடிவம் உங்களுக்காக இங்கே




மேலும் வருகிற ஆகஸ்ட் 16 அன்று ஞானலயா பவளவிழா கொண்டாட இருக்கிறது.. இது பற்றிய விபரம் இந்த இணைப்பில்


நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Tuesday, 23 June 2015

ஞானாலயா பவளவிழா மலர் 2015

இன்றைய கணினி யுகத்தில் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி ஓரளவிற்கே நண்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அச்சுத்துறை வளர்ச்சி அடைய, அடைய தமிழில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின.  கணினிகள் இல்லாத காலம் அது.. அப்போது வெளியிடப்பட்ட நூல்கள் பல இன்று காலத்தால் இல்லாமல் போயின.. அப்படி மீதம் இருப்பினும் முதல்பதிப்பு எனும் மூலவடிவில் இருந்து மாறுபட்டவை பல நூல்கள்.

இந்தத் தமிழ் சமூகம் காலத்தின் மாற்றத்தினால் எதை இழந்தாலும், அச்சில் வந்த நூல்களை வரும் தலைமுறைக்கு முழுமையாக அர்பணிக்கவேண்டும் என்ற உணர்வோடு சேமிக்கப்பட்டவைதாம் முதல்பதிப்பு நூல்கள்.

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புத்தக சேகரிப்பின் 60 ஆண்டு நிறைவு விழா  மற்றும் இவரது 75 வயதை ஒட்டியும் பெருமைப்படுத்தும் விதமாக பவளவிழா நடைபெற உள்ளது. இது குறித்த அமைக்கப்பட்ட குழுவினரின் விபரங்கள் இணைப்பில் உள்ளது.

விழாவிற்கான இடமும் தேதியும் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்விழாவில் எங்ஙனம் தங்கள் பங்களிப்பை அளிக்க விரும்பினாலும் அதற்கேற்ற வகையில் விபரங்களை அளிக்க வேண்டியே இந்த பதிவு.

இந்த விழாவிற்கான நன்கொடைகள் பெறுவதற்கென நிதிக்குழு செயலாளர் அவர்களின் பெயரில் இதற்கென புதிய வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு இருக்கிறது.

Dr. JAYARAMAN  N
Account no:3454327836
central bank of india
IFSC Code: CBIN0282105
Branch: PUDUKOTTAI

தங்களின் நன்கொடைகள் online transfer ஆக இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிட்டு தகவல்களை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உரிய இரசீதுகளை இந்த விழா மலர்க்குழு உறுப்பினர்களான திரு.ஜோதிஜி, மற்றும் திரு.நிகழ்காலத்தில் சிவா  ஆகியோர் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.

ஞானாலயா சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், அனுபவங்களையும் அனுப்பி வைக்கலாம். அவைகளும் விழாமலரின் முதன்மைப் பதிப்பாசிரியர் திரு. வைகறை அவர்களால் பரிசீலிக்கப்பட்டு விழாமலரில் இடம்பெறும்.



அரிய தமிழ் நூல்களை பாதுகாப்பதிலும், பாதுகாத்த தம்பதியினரை பெருமைப் படுத்துவதிலும் நம் பங்களிப்பை உறுதி செய்வோம்..

நன்றி
நிகழ்காலத்தில் சிவா


 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, 
ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

Sunday, 21 June 2015

தி இந்து சித்திரை மலர் - 2015 ல் ஞானாலயா பற்றி சிறப்புக்கட்டுரை

தமிழ் நூல்கள் அச்சிடப்பட்ட காலந்தொட்டு முதல்பதிப்பு நூல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னால் மட்டுமே புரியும்..  ஏன் முதல்பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.? எளிதில் புரியும் வண்ணம் ஞானாலயா நூலகம் பற்றிய சிறப்புக்கட்டுரை உங்களுக்காக


தமிழ் இந்து சித்திரை மலர் 2015 புத்தகத்தில்

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..
 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140


 நன்றியுடன் நிகழ்காலத்தில் சிவா

Sunday, 1 March 2015

காவியம் மார்ச் மாத இதழில் ஞானாலயா

காவியம் மாத இதழ் மார்ச் 2015 இதழில் வெளிவந்த ஞானாலயா நூலகத்தை பற்றியும்,  தனி நபராக இருந்தும் தமிழில் வெளிவந்த முதல் பதிப்பு நூல்கள் அனைத்தையுமே சேமித்து வைத்திருக்கக்கூடிய ஆய்வு நூலக நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் பேட்டி உங்களுக்காக





அய்யாவுடன் தொடர்பு கொள்ள.. 

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

Thursday, 25 December 2014

ஞானாலயா நூலகத்திற்கான நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு - தகவல்

நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் ஞானாலயாவைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள்.  ..தமிழில் கடந்த நூறாண்டுகளுக்குள் வெளியான நூல்களின் முதற்பதிப்பு நூல்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு உள்ளன.

பதிப்புகள் பல காணும் நூல்கள், பெரும்பாலும் மூலவடிவில் இருப்பதில்லை என்பதை ஞானாலாயா நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் சொல்லும்போது , இந்நூல்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு விளங்கும்..

இந்த நூலகத்திற்கென தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டியதோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாத்தும் அங்கே நேரில் வருபவர்கள் விரும்பும் புத்தகத்தில்  பகுதிகளை நகல் எடுத்தும் தந்தும் இன்றளவும் உற்சாகம் குறையாது இருக்கின்றனர் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.

இவர்களது முயற்சிக்கு உறுதுணையாய், நூலகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்நூலகத்தின் அரிய நூல்களை மின்நூல்கள் ஆக்கி பாதுகாக்கவும் நன்கொடைகளை அளிக்க உதவும் நல் உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நன்கொடைகளுக்கான வரிவிலக்கு 80G அனுமதி பெறப்பட்டிருக்கிறது.








அதன் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன...ஐயா வேண்டுகோளும் இணைக்கப்பட்டுள்ளது....நண்பர்களிடம் கொண்டுசேர்ப்போம்...நூலகத்தில் வளர்ச்சியில், பாதுகாப்பதில் நமது பங்கினை உறுதி செய்வோம்..

அய்யாவுடன் தொடர்பு கொள்ள.. 

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140




நன்றியுடன்

நிகழ்காலத்தில் சிவா

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...