ஞானாலயா நூலகம் என்பது தனிநபர் முயற்சியால் தமிழில் வெளிவந்த நூல்களின் முதல் பதிப்பு நூல்களை சேகரம் செய்து பாதுகாத்து வரும் ஆய்வு நூலகம் ஆகும்..முதன் முதலில் வெளியான நூல்களின் அசல்வடிவம் மறுபதிப்புகளின் போது இல்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை..
சில மாதங்களுக்கு முன்னதாக மதிமுக நிறுவனர் தலைவர் திரு. வை கோ அவர்கள் நேரில் நூலகத்திற்கு நேரில் வந்திருந்து பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். அப்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடிய விபரங்கள் மதிமுக அதிகாரபூர்வ பத்திரிக்கையான சங்கொலியில் தொடர் கட்டுரையாக வந்தது.
சங்கொலி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அதன் முதல் பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.. இது குறித்த கருத்துகளை பின்னூட்டமாகவோ அல்லது முடிவில் கொடுக்கப்பட்டுள்ள அய்யாவின் தொலைபேசி எண்ணுக்கோ தெரிவியுங்கள்..அடுத்த பகுதிகளும் தொடர்ந்து வரும்....இந்த தளம் அரசியல் சார்ந்தது அல்ல என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே..
இந்த வலைதளத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் பல ஒலிக்கோப்புகள் உள்ளன..அறியப்படாத பல அரிய தகவல்களுக்கு நேரமிருக்கும்போது கேளுங்கள்..
அய்யாவுடன் தொடர்பு கொள்ள..
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
No comments:
Post a Comment